கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.
நிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு  என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழக்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rebekal

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

39 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago