நீதிமன்றம் அருகே கொலை – மேலும் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாகதனிப்படை போலீசார் மேலும் 5 பேரிடம் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் 4  பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரை அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் இருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், கோகுல் என்பவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மனோஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் காவல்த்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த கொலை விவகாரத்தில், நீலகிரியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், நான்கு பேரை வாகன சோதனையின் போது போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment