மது அருந்திய 4 பெண்கள் போலீசருடன் தகராறில் ஈடுபட்ட ஆவலம் நிழ்ந்துள்ளது.
மும்பையில் அளவுக்கு மீறி மது அருந்திய 4 பெண்கள் போலீசருடன் தகராறில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பெண் காவலர் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் மது விருந்து ஒன்றில் கலந்து கொண்ட 4 பெண்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மும்பை மிரா சாலையில் உள்ள மைதானம் ஒன்றில் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபாட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அங்கு கூட்டம் கூடிய நிலையில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், அங்கு வந்து விசாரனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண்கள் ஆண் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டனர்.
மேலும்அவர்களை கட்டுப்படுத்த முயன்ற பெண் காவலர் அது பலனளிக்காததால் சரமாரியாகத் தாக்கினார்.இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் தப்பியோடிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU