ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கு ரூ.50,000 உத்தரவாதம் தொகை விதித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார். இதையடுத்து, கடந்த 15ம் தேதி ராஜ் குந்த்ரா உட்பட 4 பேர் மீது 1,467 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டதில் இருந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்