திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் ! நேரில் பார்த்த நண்பர் சண்முகம் தகவல்

சமூக செயற்பாட்டாளர் முகிலன்  பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை.

எனவே காணாமல் போன முகிலன் குறித்து ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனு  தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முகிலன் குறித்து அவரது நண்பர் சண்முகம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறிய தகவலில், திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காணாமல் போன முகிலனை நேரில் பார்த்தேன் .முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினேன்  என்று கூறினார்.மேலும்  ஆந்திர காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாக அவரது நண்பர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.