குவைத்தில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு வர எம்.பி. கடிதம்.!

குவைத்தில் உயிரிழந்த செங்கல்பட்டை சார்ந்தவரின் உடலை  கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செங்கல்பட்டு சேர்ந்த ஒருவர் குவைத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை செங்கல்பட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்பி வில்சன் எழுதிய கடிதத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த செங்கல்பட்டு சேர்ந்த 56 வயதான பாண்டியன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். தற்போது தவித்து வரும் அவரின் குடும்பத்தின் நிலையை அறிந்து, குவைத்திலிருந்து அவரது உடலை சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
murugan