கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்படும் திரையரங்குகள்!

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியது. 

இதனையடுத்து, இந்த நோயால் இந்தியாவிலு, சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலத்தில் இந்த நோயால் 40-க்கும் மேற்பட்டோர்  பாதிப்படைந்துள்ளனர். இதனால், அம்மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை அளித்தது. 

இதனை தொடர்ந்து, தற்போது நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என மலையாள சினிமா அமைப்புகள் தெரிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.