மகாத்மா காந்தி போல அமைக்கப்பட்ட அசுரன் சிலை.! துர்கா பூஜையில் ஏற்பட்ட குழப்பம்.!

கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது அசுரன் உருவமானது மகாத்மா காந்தி போல இருந்ததாக கூறி எழுந்த புகாரை அடுத்து, அந்த அசுரன் உருவம் மாற்றபட்டது.  

நாடு முழுவதும் இந்த வாரம் கொண்டாடப்பட உள்ள தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு கோவில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல, மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஓர் இந்து அமைப்பினர் துர்கா பூஜை ஏற்பாடு செய்து இருந்தனர்.

அதில் மஹீசாசூரன் எனும் அரக்கன் வடிவம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவம் மகாத்மா காந்தி போல உருவாக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் காவல்துறை வரையில் சென்ற பின்பு, அந்த சிலை மாற்றப்பட்டது.  இந்த செயல் வேண்டுமென்றே செய்யவில்லை. தவறுதலாக இப்படி நடந்துவிட்டது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த புகரானது, டிவிட்டர் பக்கம் ஒருவர் கொல்கத்தா போலீசை டேக் செய்து , மகாத்மா காந்தி போல இருந்ததாக கூறப்படும் அசுரன் சிலை குறித்து பதிவிட்டு இருந்தார். பின்னர் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இந்த புகைப்படம் இணையத்தில் இருந்தால் சர்ச்சை எழும் என்பதால், அந்த டிவீட்டை போலீசார் அறிவுறுத்தலின் படி டிவீட் செய்தவர் அதனை நீக்கிவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment