#Monkeypox: குரங்கு காய்ச்சல் – தமிழக மருத்துவத் துறை செயலர் கடிதம்!

குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.

உலக நாடுகளில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு அம்மைக்கு அறிகுறிகள் என கூறப்படுகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த நிலையில், குரங்கு காய்ச்சல் குறித்து தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் தகவல் தரவேண்டும். அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலர் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்பளங்கள் உடையவர்களையும், குரங்கு அம்மை சந்தேகிக்கும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களின் விவரங்களை கண்டறிந்து, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள நோயாளிகளில் உடனடியாக தனிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment