முற்றிலும் மாறுபட்ட ஊரடங்கு வருகிறது ! அனைவரும் தயாராக இருங்கள் ! – நரேந்திர மோடி

4வது ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று மோடி கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் நாட்டு மக்களுடன் உரையாடினார். 

அப்போது நரேந்திர மோடி 4ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கும் என்றார். ஆனால் இந்த  4ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த 4ஆம் கட்ட ஊரடங்கின் விதிமுறைகள் மற்றும் மற்ற விவரங்கள் மே 17ம் தேதிக்குள் அறிவிக்குப்படும் என்றார். 

author avatar
Vidhusan