'நான் M.L.A மகன். உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்!' – பல பெண்களை காம வலையில் சிக்க வைத்த தமிழக இளைஞர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு MLAவின் மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்’. என தெரிவித்தார். அந்த கார்த்திக்  ரெட்டி, MLA மகன் என்கிற பெயர் அடிக்கடி வந்ததை கவனித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பல பெண்கள் கடந்த இரண்டாடுகளில் இதே MLA மகன் என்கிற போயினாலும், கார்த்திக் ரெட்டி, பாலியல் வன்கொடுமை என் இருப்பதை கண்டறிந்து பின்னர் அந்த நபரின் அடையாளங்களை கொண்டு அந்த நபரை தேடி பிடித்தனர்.
அப்போது பல தகவல்கள் விசாரணையில் அம்பலமானது. அந்த ஆசாமியின் உண்மை பெயர் ஜஹாங்கீர். இவன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவன்.  பெங்காளூரு மால்களில் சுற்றித்திரியும் அந்த நபர், தனியாக வேலை செய்து வரும் [பெண்களை குறிவைத்து,அவர்களிடம் , தான் ஒரு MLA மகன் அம்மா ஒரு டாக்டர் என அறிமுகப்படுத்தி, தான் ஒரு கம்பெனி வைத்துள்ளதாக கூறிக்கொண்டு, தனது கம்பெனி அல்லது தனக்கு தெரிந்த கம்பெனிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவர்களை நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டி சென்று வலையில் சிக்கும் பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இது தொடர்கதையாக நடந்து வந்துள்ளது. மேலும் அவர்களுக்கு நடிக்க, மாடலிங் துறை என வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி பணம், நகைகளை வாங்கியுள்ளார். அதனை வைத்து பல சொகுசாக வலம் வந்தது தெரியவந்தது. அந்த காம ஆசாமியை பிடித்து, தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.