முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. – மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார்.
அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும். அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அதன் உறுதி தன்மையினை ஆராய குழு இருக்கிறது.
முல்லை பெரியாறு அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. விதிகளுக்கு உட்பட்டு தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. என கேரள முதல்வருக்கு பதிலை கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.