பெட்ரோல் குண்டு மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யான்குன் நகரில் அமைந்துள்ள மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சியின் மாளிகை மதில்சுவரின் மீது இன்று (வியாழக்கிழமை) பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்றபோது சூச்சி அவரது இல்லத்தில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.