MIVKXIP:பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய பொல்லார்ட்! மும்பை அணி த்ரில் வெற்றி!

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. 

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற 24-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே  மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் மட்டுமே அடித்தது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 100* ரன்கள் அடித்தார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.பின் 20-வது  ஓவரில் கடைசி பந்தில்  7 விக்கெட்டை இழந்து  மும்பை அணி 198 ரன்கள் அடித்தது.மும்பை  அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 83 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சமி  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம்  மும்பை  அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment