நடு ஏரியில் நான்கு வயது மகனை விட்டுவிட்டு காணாமல் போன பிரபல நடிகை.! 

ஏரியில் படகு சவாரி செய்த நடிகை நியா ரிவெரா தனது நான்கு வயது மகனை நடு ஏரியில் விட்டு விட்டு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை நயா ரிவெரா காலிஃபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தனது நான்கு வயது மகனான ஜோஸியுடன் இரு தினங்களுக்கு முன்பு படகு சவாரி சென்றுள்ளார். அதனையடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஏரிக்கு நடுவில் நின்ற அந்த படகில் மகன் ஜோஸி மட்டும் தூங்கி கொண்டிருந்ததை மற்றொரு படகில் சென்ற நபர் பார்த்து, அந்த குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

அதனையடுத்து போலீசார் மகன் ஜோஸியிடம் விசாரணை நடத்திய போது,  தண்ணீரில் நீந்தி கொண்டிருந்த தாய், மீண்டும் படகுக்கு வர இயலவில்லை என்று ஜோஸி கூறியுள்ளார். உடனடியாக ஏரியில் தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், இரண்டு நாட்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே போலீசார் அவர் காணாமல் போய் விட்டதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஏரியில் படகு சவாரி செய்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு தொடர்ந்து நடிகை நயாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.