தவறான தகவல்கள் – ட்விட்டர் எடுத்த அதிரடி முடிவு!

தவறான ட்விட்டுகளை குறிக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடு இருக்கும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க ட்விட்டர் நிறுவனம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. அதாவது, தவறான ட்விட்டுகளை குறிக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடு இருக்கும் என்றும், அந்த ட்விட்டுகளை ரீ-ட்விட் செய்ய முடியாது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அழைக்கும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றிய தவறான தகவல்களுக்கு எதிரான ஒரு புதிய கொள்கையின் இது ஒரு பகுதியாகும். இந்த புதிய கொள்கை, நெருக்கடிகளின் போது ட்விட்டர் தவறான தகவல்களை எவ்வாறு அணுகும் என்பதை காட்டுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் மட்டுமல்ல, இயற்கை பேரிடர், துப்பாக்கிசூடு, வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையிலும் தவறான தகவல்களை மேலும் பரவுவதை தடுக்கும்.

தவறான தகவல்களை தடுக்க இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ள வழியாகும் என்று ட்விட்டரின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் தலைவர் யோயல் ரோத் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். சரிபார்க்கப்பட்ட பயனர்கள் அல்லது அதிகாரப்பூர்வ அரசாங்க சுயவிவரங்கள் போன்ற உயர் கணக்குகளிலிருந்து தவறாக வழிநடத்தும் ட்வீட்களுக்கு லேபிள்களைச் சேர்ப்பதற்கு நிறுவனம் முன்னுரிமை அளிக்கும். மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கும் இது முன்னுரிமை அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment