#CSKvSRH: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் நேரில் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, டிசம்பர் 3 இயக்க நிறுவனர் பேராசிரியர் தீபக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், அந்த கோரிக்கைகளை ஏற்று 30 பேரை CSK- SRH போட்டியை காண இன்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து செல்கிறார். மேலும், இந்த போட்டியை காண கோரிக்கை வைத்த தீபக்கிற்கும் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 29 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment