வங்கக்கடலில் உருவானது “மிதிலி” புயல்! நாளை கரையை கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!

வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்பின், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்.? தக்கவைக்குமா பாஜக.?

இந்த புயல் ஒடிசாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி (MIDHILI) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  மிதிலி புயல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேபுபரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று  வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில் மூன்றாவதாக மிதிலி புயல் உருவாகியுள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்