மைக்ரோசாப்ட் ஓனர் பில்கேட்ஸ் எங்கே ? விவாகரத்து பற்றிய கேள்விகளைத் தவிர்க்க மறைந்துள்ளாரா

மைக்ரோசாப்ட் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் மறைந்து வாழ்வதற்கான காரணம் என்ன

உலக கோடீவரர்களில் ஒருவரானா மைக்ரோசாப்ட் ஓனர் பில்கேட்ஸ் சில மாதங்களாக மறைந்து வாழ்வதாக புகார் எழுந்துள்ளது, ஏனெனில் பில்கேட்ஸ் (65) தன் மனைவி மெலின்டா (56) இருவரும் ஒரவரை ஒருவர் டைவர்ஸ் செய்வதாக ட்விட்டரில் அறிவித்திருந்தனர், இந்நிலையில் பில்கெட்ஸ் இந்த வாரம் இந்தியன் வெல்ஸில் உள்ள விண்டேஜ் கிளப்பில் மூத்த மகள் ஜெனிபர் (25) மற்றும் அவரது வருங்கால கணவர், எகிப்திய ஷோஜம்பர் நயல் நாசர் ஆகியோருடன் அவர் கடந்த மூன்று மாதங்களாக அங்கேயே தங்கியிருக்கிறார் என்று செய்தி வெளிவந்தது.

மேலும் பில்கேட்ஸ் பல நாள்களாக மனைவியுடனான டைவர்ஸ்சை எதிர்பார்த்து இருப்பதாகவும், மேலும் அவரது விவாகரத்து அல்லது எப்ஸ்டீனுடனான அவரது உறவுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்பதை தவிர்க்க பில்கேட்ஸ் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக வின்டேஜ் க்ளப் தகுந்த இடமாக அவருக்கு அமைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் 2019 அக்டோபரிலிருந்தே மெலிண்டா விவாகரத்து குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கினார் என்பது பின்னர் தெரியவந்தது, இது பில்லியனர் பெடோஃபைல் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பில்கேட்ஸின் நட்பு பகிரங்கப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரை, எப்ஸ்டீனுடனான அவரது தொடர்புகள் குறித்து வரும் செய்திகள் பில் தனது தரப்பில் ஏதேனும் தவறு செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.