99.90 அடியாக அதிகரித்த மேட்டூர் அணை நீர்வரத்து – வினாடிக்கு 27.21 ஆயிரமாக அதிகரிப்பு!

99.90 அடியாக அதிகரித்த மேட்டூர் அணை நீர்வரத்த, வினாடிக்கு 27.21 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் அதிகமாக பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. 99.11 அடியாக நேற்று காலை வரை இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 99.90 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணை நிரம்ப கூடிய அபாயம் ஏற்படும் என்பதால் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்பொழுது கொள்ளளவு 93.45 டிஎம்சி ஆக உள்ளது. வினாடிக்கு 26 ஆயிரத்து 102 கன அடியிலிருந்து 27 ஆயிரத்து 212 கன அடியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி வினாடிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal