மனநலம் பாதிக்கப்பட்டோரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

மனநலம் பாதிக்கப்பட்டோரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் கற்பகம் என்பவர், பொது இடங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்த பலருக்கு கொரோனா உள்ளதாக தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை கண்டறிந்து காப்பகங்களில் அரசு சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை 18-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.