50 வயதில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி படிப்பை தொடங்க துடிக்கும் வயதான மாணவி.!

1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் ஏற்படுத்திய மனக்கசப்பில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட 50 வயதான எம்.எஸ்.லாகிண்டீவ் தற்போது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

மேகலயா மாநிலத்தில் 1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் கடினமாக இருந்ததால், எம்.எஸ்.லாகிண்டீவ் தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி கொண்டார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது மீண்டும் பள்ளி படிப்பை தொடர நினைத்து,

ரி-போய் மாவட்டத்தில் உள்ள பலவன் கல்லூரியில் தொலைதூர பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். அதன் மூலம் 12 ஆம் வகுப்பு கலை அறிவியல் பாடப்பிரிவை எடுத்து தேர்வெழுதியுள்ளார். அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.அதில், எம்.எஸ்.லாகிண்டீவ் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதன் பிறகு கல்லூரி படிப்பை தொடங்க ஆசை உள்ளதாக எம்.எஸ்.லாகிண்டீவ் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.