நாளை தாக்கலாகிறது சென்னை மாநகராட்சி 2023-24 பட்ஜெட்…!

சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (மார்ச்-27) தாக்கல் செய்யப்படவுள்ளது. நாளை காலை 10 மணி அளவில் சென்னை மாநகராட்சி கூடத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்ய உள்ளார். இதில் 70க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாளை மறுநாள் (மார்ச்-28) நடைபெறவிருக்கிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment