ஒரு தொடரில் இரண்டு போட்டி என்பது அதிகம் -கங்குலி..!

  • ஆஸ்திரேலிய அணியுடன்  4 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளனர்.அதில் 2 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவு ஆட்டமாக விளையாடலாம் என ஆஸ்திரேலிய கூறியது.
  • ஒரு தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது அதிகம் என கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணி வருகின்ற 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணி  இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர்.இந்த போட்டி தொடரின்போது பகல்-இரவு டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்  இந்திய கிரிக்கெட்  நிர்வாகிகளுடன்பேச உள்ளனர்.

சமீபத்தில் இந்திய அணி முதல் முறையாக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் பகல்-இரவு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பகல்-இரவு போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி  சில நாள்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல்-இரவு போட்டியில் விளையாடலாம் என கூறி இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுமா..?என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக எதுவும் கேட்கவில்லை. ஒரு தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது அதிகம். ஒரு தொடரில் ஒரு போட்டியில் விளையாடலாம் என கூறினார்.

 

author avatar
murugan