இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு.. 3 பேர் உயிரிழந்த சோகம்!

பாகிஸ்தான், கராச்சியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் உள்ள குஷன்-இ-இஃபால் பகுதியில் இருக்கும் இரண்டு மாடி கட்டடத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் அங்கு வசித்து வந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 15 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், இந்த குண்டுவெடிப்பால் அந்த கட்டடத்தில் உள்ள ஜன்னல்களும், அதற்கு அருகில் உள்ள வாகனங்கள் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்புக்காண காரணம் குறித்து அந்நாட்டு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.