தனுஷை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் மாரி செல்வராஜ்..??

இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற அருமையான படத்தை இயக்கி அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற தரமான படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் , இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரம் படத்தை இயக்கவிட்டு அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடி வாசல் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.