சிபிஐ விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜர்!

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியா ஆஜர்.

டெல்லி மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மத்திய புலனாய்வு சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்பட்டது. டெல்லியின் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு அவர் ஆஜராவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியா ஆஜரானார். இதனால், டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment