மணீஷ்சிசோடியாவுக்கு கொரோனா-டெங்கு!! மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது .

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப் 14ந்தேதி  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.அதன் பிறகு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த புதன் கிழமை டில்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா பாதித்த அவருக்கு டெங்குவாளும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும். வியாழன்று சிசோடியா ஐ.சி.யுவிலிருந்து  மாற்றப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலைய்மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், லோக் நாயக் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனக்கு சிறப்பான மருத்துவப் பணி செய்தனர் என்று பாராட்டிய அவர் நோயாளிகளை இவர்கள் அணுகும் முறை மிகவும் பாராட்டத்தக்கது என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

 

author avatar
Kaliraj