மாண்டஸ் புயல் : துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் லேசான மழை தொடங்கியுள்ளது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர்  வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. கல்பாக்கம், கடலூர், மரக்காணம் பகுதியில் கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment