மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். 42 வயதான அந்த நபரை நேற்று கைது செய்யப்பட்டதாக ஹில் லைன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் விளையாடுவதாக கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, சிறுமியின் மூத்த சகோதரர் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அந்த நபர் மீது புகார் அளித்தனர். பின்னர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…