திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதில் பட்டியல் மற்றும் பழங்குடியின வேட்பாளர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெண்கள் 50 பேர், இஸ்லாமியர்கள் 42 பேர், தாழ்த்தப்பட்ட சமுகத்தில் 79 பேர், பழங்குடியினர் 17 பேர் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது பதிவில் இருக்கும் 27 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என பல அதிரடியான விஷயங்களை வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஏற்று மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க இருகட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…