காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சூடாக சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் முறுக்கு, வடை என செலவு செய்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அட்டகாசமான பிரட் போண்டாவை தயாரித்து சாப்பிடலாம். இந்த போண்டாவை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் மிக்சி ஜாரில் தேவையான அளவு பிரட்டை துண்டு துண்டாக உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும், இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்து விட்டு எடுத்து விடவேண்டும், தேங்காய் துருவலும் பிரட்டும் நன்றாக அரைந்த பின்பு இந்த கலவையை ஒரு பௌலில் கொட்டி இதனுடன் உப்பு, தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பதாக முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் பால் கால் டம்ளர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு இதை பிசைய வேண்டும். அதன்பின் இவற்றை சிறிய சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதித்ததும் மிதமான தீயில் வைத்து இந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான ஸ்நாக்ஸ் வீட்டிலேயே தயார். செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…