மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 13,000 எட்டியதுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று (மே 3) மட்டும் 678 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 12,974 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 27 பேரு உயிரிழந்துள்ள நிலையில் 548ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.