கொலை வழக்குக்களை விசாரிக்க தனி பிரிவை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றகிளை பரிந்துரை.!

கொலை வழக்குகளை விசாரிக்க காவல் பிரிவில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். அப்போது தான் காவல்துறையினருக்கு வேலைப்பளு குறையும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.   

தமிழகத்தில் தற்போது கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறை பிரிவினரில் சட்டம் ஒழுங்கு பிரிவினர் தான் அந்த கொலை வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, கொலை வழக்குகளை விசாரிக்க தனி காவல் பிரிவு உருவாக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு காவல் பிரிவினரே, கொலை வழக்குகளை விசாரிப்பதால் வேலை பளு அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்கவே தனி பிரிவு உருவாக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அமர்வு பரிந்துரை செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment