#CINEMA NEWS: திட்டமிட்டபடி ” மாநாடு” நாளை ரிலீசாகிறது..!

நாளை ” மாநாடு” திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகிறது என இயக்குநர் வெங்கட் பிரபு  தெரிவித்தார். 

சிலம்பரசன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படம் உருவானது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர்.

இந்த பாடம் நாளை திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் இன்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் ” நாளை வெளியாக இருந்த “மாநாடு” திரைப்படம் தள்ளி வைக்கப்படுகிறது எனவும் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என ட்விட் செய்து இருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு “கடவுள் இருக்கார்” என ட்வீட் செய்துள்ளார். இதனால், திட்டமிட்டபடி ” மாநாடு” திரைப்படம் நாளை ரிலீசாகிறதா..? என்ற கேள்வி எழுந்தது. பின்னர், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் நாளை திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகிறது என தெரிவித்தார்.

author avatar
murugan