நீண்ட அழகான முடி வேணுமா அப்ப இத செய்ங்க போதும் !!!!!!!!மிக எளிய வீட்டு மருத்துவம்!!!

இன்றைய  தலைமுறையினரை  பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயம் முடி உதிர்வு அதற்க்கான எளிய வீட்டுவைத்தியத்தை நாம் இங்கு பார்ப்போம்.நம் முன்னோர்களும் சித்தர்களும் இது பற்றிய தெளிவை நமக்கு கொடுத்த போதும் நம்மில் பலருக்கு இதற்க்கான மருத்துவ முறையை பற்றி தெரியவில்லை.நீண்ட அழகான முடியை  விரும்பாத பெண்களே இருக்க முடியாது பெண்களுக்கு நீண்ட அழகான முடி வளர மிக எளிய வீட்டு வைத்தியத்தை பார்ப்போம்.
மேலும் முடிஉதிர்விற்கு  பல காரணங்கள் உண்டு பித்தம் ,கால்சியம் குறைபாடு,இரும்புசத்து குறைபாடு முதலிய  காரணங்களால் முடி அதிக அளவில் உதிர்கிறது.
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் -200மிலி
கருவேப்பில்லை -ஒரு கைபிடிஅளவு
செம்பருத்தி  இலை -ஒரு கைபிடிஅளவு
காய்ந்த செம்பருத்தி இலை -3
செய்முறை:
கருவேப்பில்லை இலைகளை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும் .இதே போல் செம்பருத்தி  இலைகளையும் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.1 1/2 டம்ளர் நீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும் .பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கலவையை நன்கு 20 நிமிடங்கள்  கொதிக்க  வைக்க வேண்டும்.இதை அடிக்கடி கிளறி விட வேண்டும்.
நன்கு கொதித்தவுடன்  தேங்காய் எண்ணெய்யை ஊற்ற வேண்டும்.அதையும் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் நன்கு கொதித்து நறுமணம் வந்தவுடன் காய்ந்த செம்பருத்தி பூவை போடவேண்டும்.பூவை போட்டவுடன் இறக்கி விட வேண்டும்.இதனை ஆறவைத்து குளிப்பதற்கு  முன்பு தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வு தடைபடும்.
 

Leave a Comment