சாந்தனுவின் குறும்படத்தை பார்த்து தளபதி விஜய் என்ன கூறினார் தெரியுமா..?

செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன்’ என்ற வசனம் நடிகர் விஜயை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

நடிகர் சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார், மேலும் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான் .

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தனர். மேலும் சாந்தனுவே கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கி,  அந்த படத்தின் டீசரை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் அந்த குறும்படத்தை நடிகர் சாந்தனு விஜய்க்குத்தான் முதலில் அனுப்பினாராம் அதை பார்த்த விஜய் நன்றாக இருக்கிறது என்று சிரித்து கொண்டே கூறியுள்ளாராம், மேலும் அதில் வரும் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன், செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன்’ என்ற வசனம் நடிகர் விஜயை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.