மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு..!

மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தை  விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள்  தினமும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மக்களவையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிகளுக்கு இடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு திருத்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

author avatar
murugan