டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல்…!

கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது  திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறினார். இதனால் உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உள்ளது.

அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணகளால் தேர்தல் நடை பெறவில்லை.இது குறித்து வழக்கு ஒன்றில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதிக்குள் தேர்தலை நடத்தப்படும் என  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால் நவம்பர் மாத இறுதியில் இருந்து டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரத்துக்குள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
murugan