இந்தியாவில் 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு…!

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 4,041 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 3,962 ஆக குறைந்துள்ளது.  இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 10ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,677 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,697 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,25,454 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22,416 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,93 கோடி பேருக்கு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 11,67,034 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment