இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் பரபரப்பு புகார் !!!!!

  • இசைஞானி  இளையராஜாவிற்கு கடந்த மாதம் பிப்ரவரி 2,3 தேதிகளில் ஓ.எம்.சி மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.
  • இந்த நிகழ்வில் முறைகேடு நடந்ததாகவும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ்குமார், கே.ராஜன்,எஸ்.வி.சேகர் ஆகியோர் தற்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார்கள்.

இசைஞானி  இளையராஜாவிற்கு கடந்த மாதம் பிப்ரவரி 2,3 தேதிகளில் ஓ.எம்.சி மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  திரைத்துறையில் உள்ள அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்வில் முறைகேடு நடந்ததாகவும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ்குமார், கே.ராஜன்,எஸ்.வி.சேகர் ஆகியோர் தற்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில்,இளையராஜாவிற்கு பாராட்டுவிழா நடத்தி அவருக்கு ஏதேனும் விருது வழங்கிருக்கலாம். அதை செய்யாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவருக்கு 3கோடி ரூபாய் வாங்கியது தவறு.

மேலும் தயாரிப்பாளர்களுடைய பணத்தில் வாழ்ந்த இளையராஜா அவர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தயாரிப்பாளர்களின் பணத்தில் பாராட்டுவிழாவையும் நடத்தி கொண்டு அவர்களின் பணத்தையும் பெற்று கொண்டது ஒரு உலகமகா அதிசயம் என்றும் அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

Leave a Comment