அந்த நடிகையை அலைக்கழித்த வடிவேலு.! விஜய் படத்தில் நடந்த சம்பவம்…

Vadivelu: நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, நடிகர் வடிவேலு தன்னை அலைக்கழித்தாக லேடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பிரேமா பிரியா கூறிஉள்ளார்.

நடிகர் வடிவேலுவை பற்றி சக நடிகர்கள் தான் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால், இப்பொது நடிகையும் குறை கூறியுள்ளார். அதாவது, நடிகர் வாடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை பற்றி புகழ்ந்து பேசினால், தன்னுடன் வைத்து கொள்வார்.

தனது சக நடிகர்க்ள் அவரை மிஞ்சி வளர்ந்தாலோ…வேற ஏதெனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலோ… அடுத்த முறை தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்புகளை வழங்க மாட்டார். இதனை பலர் பல ஊடகங்களில் கூறியுள்ளனர்.

iஇந்த நிலையில், லேடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டான பிரேமா பிரியா வேக், வடிவேலு மற்றும் சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் சிறிய வேடங்களில் நடித்து திரை வெளிச்சத்துக்கு வந்தவர்.

இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி ஷூட்டிங்குக்குப் போனால், அவரை  பார்த்ததும் இந்தப் பொண்ணு வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்லி அனுப்பிவிடுவார்களாம். இதனால் பல வாய்ப்புகள் பறிபோய்விட்டதாக பிரேமா பிரியா கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் வடிவேலுவும் தன்னை அலைக்கழித்தாக கூறிஉள்ளார். இது  குறித்து அவர் பேசுகையில், 5 படங்களில் நடிக்க வாய்ப்பு அளித்தவர் அதன் பின் தன்னை அவொய்ட் பண்ண ஆரமித்தார். குன்றத்தூர் அருகே கோவூரில் வடிவேலு சார் ஷூட்டிங் நடக்கும். அப்பொழுது, அங்கெ அடிக்கடி செல்வேன் மேக்கப் போடுவேன், டிபன் சாப்டுவேன்.

அப்றம் அவர் வருவார், இல்ல உனக்கு அடுத்த முறை வாய்ப்பு தரேன் என்று சொல்லவார். இவ்வாறு அடிக்கடி கோவூர் சென்று வருவேன் பலமுறை இவ்வாறு நடந்திருக்கிறது. முக்கியமாக விஜய்யின் சுறா படமும் சத்தியராஜ் படம் ஒன்று எனவும் தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.