பெண்களே! முடிகொட்டுவதற்கு முடிவு கட்ட வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முடி கொட்டுவதை தடுக்க சூப்பர் டிப்ஸ்.

இன்றைய இளம் பெண்கள் தங்களது அழகு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், முழு கவனம் செலுத்தி வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மிகவும் கவனம் செலுத்துவர். இதற்காக இவர்கள் அவசரப்பட்டு, செயற்கையான மருந்துகளை பயன்படுத்தும் போது, இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முடிகொட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • செம்பருத்தி
  • தேங்காய்ப்பால்
  • ஆவாரம்பூ

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முடி கொட்டுவதை தவிர்ப்பதில் ஆவாரம் பூ மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

செம்பருத்தி, தேங்காய்ப்பால் மற்றும் ஆவாரம் பூ மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை முடியில் தேய்த்து, ஊறவைத்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். இவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டுவது நின்று, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.