இரு நாடுகள் இடையே பதற்றத்தை நிலவி வரும் நிலையில் , இராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் திடீர் பயணம் மேற்கொண்டார்.
லடாக் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், இன்று லடாக் சென்று உள்ள பிரதமர் மோடி காயமடைந்த வீரர்களிடம் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், காயமடைந்த வீரர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினர்.
கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற மோதலில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் தற்போது லேவில் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.