மக்கள் பணிக்காக கைகோர்த்த KPY பாலா – ராகவா லாரன்ஸ்.! குவியும் பாராட்டுகள்…

KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா.

நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர்.

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் தனது அட்டகாசமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார்.

இதன் பின் அவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர், சின்னத்திரையில் சம்பாதித்த பணத்தில் மக்களுக்காக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஆம்புலன்ஸில் தொடங்கி சமீபத்தில் கூட, சைக்கிள் கூட இல்லாமல் தவித்த பெட்ரோல் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு பைக்கை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இவ்வாறு, மக்களுக்கு நல்ல காரியங்களை செய்து வரும் kpy பாலாவிடம், திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு  மேல்நிலைப்பள்ளிலிருந்து உதவி குரல் வந்துள்ளது.

இதனை கையில் எடுத்த பாலா தன்னால் முடிந்த அளவு பணம் ரூ.5 லட்சத்தை ரெடி செய்துவிட்டு, இந்த உதவியை யாரை பார்த்து செய்து வந்தாரோ அதாவது ராகவா லாரன்ஸிடம் மீதமுள்ள பணத்திற்கு உதவியை நாடியுள்ளார்.

உடனே, ராகவா லாரன்ஸிடம் பாலா உதவி கேட்க கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒகே என கூறிவிட்டு உதவி செய்ய முன் வந்துள்ளார். இப்பொழுது, 15 லட்சம் ரூபாயை அந்த பள்ளிக்கு கொடுத்து உதவியை செய்ய முன் வந்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.