ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கோலி, ரோஹித் முன்னேற்றம்.!

ஐசிசி ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இந்தியா- இலங்கை முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு வெளியான ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்த கோலி, இரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் இருக்கிறார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 83 ரன்கள் அடித்ததன்மூலம் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்திலும், 2 விக்கெட்கள் எடுத்த மொஹம்மது சிராஜ், 4 இடங்கள் முன்னேறி 18-வது இடத்திற்கும் உயர்ந்துள்ளனர். இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, இந்த போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு போராடினார்.

ஆனாலும் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது, 20 இடங்கள் உயர்ந்து 61-வது இடத்திற்கு ஷனகா முன்னேற்றம் கண்டுள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசாம், தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சாளர்களில் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும் இருக்கின்றனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment