கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – மேலும் இரு காவலர்களிடம் விசாரணை!

கோடநாடு வழக்கு தொடர்பாக கூடலூர் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தில் விபத்தில் உயிரிழந்த கனகராஜ், மனைவி, சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இதைத்தவிர அரசுத்தரப்பு சாட்சியாளர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதன்படி, வழக்கில் 36வது சாட்சியான ஷாஜி, 38வது நபராக சேர்க்கப்பட்ட அனிஷ் ஆகிய இருவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மேலும் இரு காவலர்களிடம் விசாரணை தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை குற்றம் நடந்தபோது தப்பித்தவர்களை கூடலூர் சோதனை சாவடியில் பிடித்த, காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்றைய தினமும், இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பாக தான் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, கோடநாடு எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரான்கள் பறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்