மண்ணை கவ்வியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று நடைபெற்ற  55-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி  பஞ்சாப்பில்  உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 170  ரன்கள் எடுத்தது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சில் சம் கரண்  3 விக்கெட்  கைப்பற்றினார்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினார்.அதிரடியாக விளையாடிய அவர் 71 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4  விக்கெட்டை இழந்து 173 ரன்கள் அடித்தது.இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 71,பூரன் 36 ரன்கள் அடித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Leave a Comment