பாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணம் தீய சக்தி-பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர்

பாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணம் தீய சக்தி என்று  பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர்  தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரக்யாசிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
11 ஆண்டுகளாக இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது பிரக்யா சிங் தாகூர் பாஜக எம்.பி.யாக உள்ளார்.இவர் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்  பாஜகவின் மூத்த தலைவர்கள் வாஜ்பாய் , மனோகர் பரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி  ஆகியோர் மரணம் குறித்து பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக போபாலில் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில்  மகாராஜ்ஜி என்னிடம்  கூறுகையில்,உங்கள் கட்சிக்கு  மிகவும் மோசமான நேரம் ஆகும்.எதிர்க் கட்சிகள் உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக  தீய சக்திகளை பயன்படுத்துகின்றது .எனவே நீங்கள் கவனமாக இருக்க  வேண்டும் என்று  என்னிடம் கூறினார். நான் அதற்கு பிறகு அதை மறந்து விட்டேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறியது  உண்மை என்றே தெரிகிறது.

கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்ற நிலையில் அவர் சொன்னதை இப்போது நினைத்து பார்த்தேன்.இது  உண்மையாகத்தான் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

 

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago