திருச்சியில் கள்ளகாதலால் கொத்தனார் கொலை….!!!

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தால் கொத்தனார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ சேகர் (37). இவரது மனைவி பெயர் வனரோஜா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். 

இந்நிலையில், ராஜசேகர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மனைவி மேனகாவுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். இதனை அறிந்த வனரோஜா 5 ஆண்டுகளுக்கு முன்பதாகவே ராஜசேகரை பிரிந்து குழந்தைகளையும் அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து, ராஜசேகர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். துறையூர் அருகே நேற்று காலை கல்லால் தாக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசார் முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி மேனகாவையும் விசாரித்து வருகிறார்கள். மேலும் மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment